யாஷாஸ்வினி தேஸ்வால்
யாஷாஸ்வினி சிங் தேஸ்வால் (23) டெல்லியைச் சேர்ந்த துப்பாக்கிச் சுடுதல் விளையாட்டு வீராங்கனை. 10 மீட்டர் ஏர் பிஸ்டர் பிரிவில் இவர் போட்டியிடுகிறார். 2019-ல் ஐ.எஸ்.எஸ்.எஃப். உலக கோப்பை போட்டியில் இவர் தங்கப் பதக்கம் வென்றார். அதனால் டோக்யோ ஒலிம்பிக்கில் பங்கேற்க இவருக்கு வாய்ப்பு உறுதி செய்யப்பட்டது.
2017-ல் ஐ.எஸ்.எஸ்.எப். ஜூனியல் உலக சாம்பியன் போட்டியில் இவர் தங்கம் வென்றார். ஜூனியர் பிரிவில் அப்போது அவர் உலக சாதனை நிகழ்த்தினார்.






























