விஜயகாந்த் உடல்நிலை இப்போது எப்படி உள்ளது? கொரோனாவால் பாதிக்கப்பட்ட பிரேமலதா மருத்துவமனையில் அனுமதி

பட மூலாதாரம், dmdk party
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் விரைவில் வீடு திரும்புவார் என்றும் அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த் அத்தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் மருத்துவமனை தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பாக சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனை வெளியிட்டிருக்கும் அறிக்கையில், பிரேமலதா விஜயகாந்திற்கு செப்டம்பர் 28ஆம் தேதி கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டிருக்கும் நிலையில், அவர் சிகிச்சைக்காக தங்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.
விஜயகாந்தைப் பொறுத்தவரை, அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் நோய்த் தொற்றுக்கான வெளிப்புற அறிகுறிகள் ஏதும் இல்லையென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- கொரோனா சந்தேகங்கள்: முக்கிய கேள்விகளும் அதற்கான பதில்களும்
- கொரோனா வைரஸ்: உங்களை தற்காத்துக் கொள்வது எப்படி?
- கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு மருந்து எப்போது கிடைக்கும்?
- கொரோனா வைரஸ் தடுப்பூசி எப்போது கிடைக்கும்?
- கொரோனா சானிடைசர் தரமானதா என்பதை எப்படி கண்டுபிடிப்பது?
- கொரோனா வைரஸ்: கோவிட் - 19 பற்றி நமக்கு தெரியாத விஷயங்கள் என்ன?

பிரேமலதாவிற்கான சோதனைகள் முடிந்தவுடன் விஜயகாந்த் வீட்டிற்கு அனுப்பப்படுவார் என்றும் மருத்துவமனை கூறப்பட்டுள்ளது.
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கடந்த செப்டம்பர் 24ஆம் தேதியன்று லேசான கொரோனா அறிகுறிகளுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வருகிறார்.
இதற்காக சிங்கப்பூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்ட பின் சென்னை திரும்பிய அவர், கடந்த சில மாதங்களாக வீட்டில் ஓய்வில் இருந்து வருகிறார்.
கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை தவிர்த்து வந்த விஜயகாந்த், தேமுதிகவின் 14-வது ஆண்டு விழாவையொட்டி கடந்த 14-ஆம் தேதி தேமுதிக கட்சி அலுவலகத்தில் கொடியை ஏற்றி வைத்து தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கினார்.
பிற செய்திகள்:
- அர்மீனியா - அஜர்பைஜான் ராணுவ மோதல்: முன்னாள் சோவியத் நாடுகள் சண்டையிடுவது ஏன்?
- உங்கள் இதயத்தை பாதுகாப்பது எப்படி - 6 முக்கிய கேள்வி பதில்கள்
- 'அதிமுக ஆட்சிக்கு எதிராக வாக்களித்தது ஏன்?' : பன்னீர்செல்வத்திடம் பழனிசாமி கேள்வி
- அரபு உலகின் வலிமைமிக்க நாடாக ஐக்கிய அரபு அமீரகம் உருவெடுத்தது எப்படி?
- 380 ரூபாய் செலவில் கொரோனா பரிசோதனை செய்ய 12 கோடி கருவிகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
































