வங்கதேச பிரதமரை நாட்டை விட்டே துரத்திய மாணவர் போராட்டம் நடந்தது எப்படி?

வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

வங்கதேசத்தில் 15 ஆண்டுகளாக நீடித்த ஷேக் ஹசீனாவின் ஆட்சிக்கு கடந்த ஜூலையில் வெடித்த மாணவர் போராட்டம் முடிவு கட்டியுள்ளது. மாணவர் போராட்டத்தால் எழுந்த அசாதாரண சூழல் காரணமாக, ஷேக் ஹசீனா பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு நாட்டை விட்டே வெளியேறிவிட்டார். அவர் எங்கே செல்லப் போகிறார்? அவரது எதிர்காலத் திட்டம் என்ன? என்பது இன்னும் தெளிவாகவில்லை.

வங்கதேசத்தில் இடைக்கால அரசு அமைக்கப்படும் என்று ராணுவ தளபதி அறிவித்துள்ளார். வங்கதேச அரசியலில் 2 தசாப்தங்களாக கோலோச்சிய ஷேக் ஹசீனாவை ஆட்சி, அதிகாரத்தில் இருந்து அகற்றிய மாணவர் போராட்டத்தின் வீரியத்தை உணர்த்தும் புகைப்படங்களைப் பார்க்கலாம்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)