இயற்கை சீற்றத்தால் இலங்கையில் 2 லட்சம் பேர் பாதிப்பு (புகைப்படத் தொகுப்பு)

இலங்கையில் மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 122-ஆக அதிகரித்துள்ள நிலையில் மீட்புப் பணிகளும், நிவாரண பணிகளும் நடைபெற்று வருகின்றன. இன்னும் பல பகுதிகளில் வெள்ளம் வடிந்தபாடில்லை. அது குறித்த புகைப்படத் தொகுப்பு.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இலங்கையில் மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 100 ஆக அதிகரித்துள்ளது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 99 ஆக குறைந்துள்ளது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, களுத்துறை , இரத்தினபுரி , மாத்தறை மற்றும் கேகாலை மற்றும் கம்பகா ஆகிய மாவட்டங்களிலே மரணங்களும் காணாமல் போனவர்கள் பற்றிய விபரங்களும் பதிவாகியிருப்பதாக அவர் தெரிவிக்கின்றார்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சுமார் 52 ஆயிரம் குடும்பங்களை சேர்ந்த சுமார் 2 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அரசு பேரிடர் முகாமைத்துவ மையம் தெரிவித்துள்ளது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மேல் மாகாணத்தில் களுத்துறை மாவட்டம் -38 பேர் கம்பகா மாவட்டம் - 02 பேர் என 40 மரணங்களும் பதிவாகியுள்ளன.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, களுத்துறை மாவட்டத்தில் 80 பேர் காணாமல் போயுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சப்ரகமுவ மாகாணத்தில் ரத்தினபுரி மாவட்டம் - 49 பேர் கேகாலை மாவட்டம் - 02 பேர் என்ற எண்ணிக்கையில் உயிரிழப்புகள் இடம்பெற்றுள்ளன

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கேகாலை மாவட்டத்தில் 2 பேர் காணாமல் போயுள்ளனர்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, தென் மாகாணத்தில் மாத்தறை மாவட்டத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, தொடர்ந்து காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 17 என அறிவிக்கப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மழையுடன் கூடிய கால நிலை நீடிக்குமானால் கம்பகா தவிர்ந்த ஏனைய மாவட்டங்களிலுள்ள சில பிரதேசங்களில் நிலச்சரிவு அபாயம் இருப்பதாக தேசிய கட்டிட ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அந்த பகுதிகளிலுள்ள குடியிருப்பாளர்கள் மற்றும் அவ்வழியாக போக்குவரத்து செய்வோர் அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பலியானவர்களை எடுத்து செல்வதற்காக தயார் செய்யப்பட்டுள்ள சவப்பெட்டிகள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மீட்புப்பணிகளில் ராணுவம் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, நிவாரண பொருட்களுக்காக காத்திருக்கும் பொதுமக்கள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்திய நிவாராண பொருட்களுடன் அந்நாட்டிலிருந்து வெள்ளிக்கிழமை புறப்பட்ட கப்பல் தற்போது கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஞாயிற்றுக்கிழமை மற்றுமோர் நிவாரண கப்பல் வந்தடையவிருப்பதாக இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகராலய தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்