ஹாங்காங் நாடாளுமன்றம் சூறையாடல்: கண்ணாடிகளை உடைத்து போராட்டக்காரர்கள் நுழைந்தனர்

பட மூலாதாரம், Getty Images

வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

பிரிட்டனின் நிர்வாகத்திலிருந்து ஹாங்காங் சீனாவிடம் ஒப்படைக்கப்பட்டதன் 22ஆவது ஆண்டு தினம் அனுசரிக்கப்பட்டு வரும் நிலையில், ஹாங்காங் அரசின் சமீபத்திய செயல்பாடுகளுக்கு எதிர்ப்பு போராட்டம் நடத்தி வரும் மக்கள் இன்று அதன் நாடாளுமன்ற அவையின் வளாகத்தை உடைத்துக்கொண்டு உள்ளே சென்றனர்.

ஹாங்காங்கில் குற்றவாளிகள் என சந்தேகிக்கும் நபரை தைவான், சீனாவிடம் ஒப்படைக்கும் திட்டம் தொடர்பான மசோதாவை அரசு கைவிட வேண்டுமென்று வலியுறுத்தி கடந்த மார்ச் மாதம் முதல் மக்கள் நடத்தி வரும் போராட்டத்தின் நீட்சியில் இது சமீபத்திய சம்பவமாக அமைந்துள்ளது.

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

ஹாங்காங் நாடாளுமன்ற அவை அமைந்துள்ள கட்டடத்தின் முன்புற கண்ணாடிகளை பத்துக்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் ஆயுதங்கள் மற்றும் பொருட்களை கொண்டு உடைக்க அதை மற்ற போராட்டக்காரர்கள் சூழ்ந்து இருந்து பார்வையிட்டனர்.

பட மூலாதாரம், Getty Images

நாடாளுமன்ற அவை அமைந்துள்ள கட்டடத்தின் வெளிப்புற கண்ணாடியை உடைத்துக்கொண்டு உள்ளே சென்ற போராட்டக்காரர்கள், அரசுக்கு எதிரான வாசகங்களை சுவர்களில் எழுதியதுடன், வெளியே சூழ்ந்திருக்கும் போராட்டக்காரர்களை நோக்கி கைகளை அசைத்தனர்.

ஹாங்காங் அரசாங்கத்திற்கு எதிராக கடந்த மார்ச் மாதத்திலிருந்து அமைதி வழியில் நடைபெற்று வரும் போராட்டத்தின் வடிவம், தற்போது முதல் முறையாக திசைமாறியுள்ளது.

நாடாளுமன்ற அவையின் வளாகத்திற்குள் அத்துமீறி நுழையும் போராட்டக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும், கைது செய்யப்படுவார்கள் உள்ளிட்ட எச்சரிக்கைகளை காவல்துறையினர் விடுத்தனர். இருப்பினும், கட்டடத்தின் கண்ணாடியை உடைத்துக்கொண்டு நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் உள்ளே நுழைந்தனர்.

பட மூலாதாரம், Getty Images

ஹாங்காங்கின் நாடாளுமன்ற அவைக்குள் நுழையும் போராட்டக்காரர்களின் முயற்சியின் துவக்கத்தில் மிளகாய் பொடி தூவியும், தடியடி நடத்தியும் கூட்டத்தை கலைக்க நினைத்த காவல்துறையினர், பிற்பகுதியில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

1997ஆம் ஆண்டு இதே நாளில் ஹாங்காங் நகரம், பிரிட்டனின் கட்டுப்பாட்டிலிருந்து சீனாவின் கட்டுப்பாட்டிற்கு சென்றது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :