'பாரத் ஜோடோ' யாத்திரையில் ராகுலுடன் கலந்துகொண்ட கமல்

காணொளிக் குறிப்பு, 'ராகுல் நேருவின் கொள்ளுப் பேரன்; நான் காந்தியின் கொள்ளுப் பேரன்' - கமல்
'பாரத் ஜோடோ' யாத்திரையில் ராகுலுடன் கலந்துகொண்ட கமல்

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி முன்னெடுத்துள்ள 'இந்திய ஒற்றுமை' யாத்திரையில் கலந்துகொள்ள வேண்டாம் என பலர் தனக்கு அறிவுறுத்தியதாகவும், தான் ஓர் இந்திய குடிமகனாக கலந்துகொண்டதாகவும் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் கூறியுள்ளார்.

 டெல்லியில் நடந்த இந்திய ஒற்றுமை யாத்திரையின் நிகழ்வில் பங்குபெற்ற கமல்ஹாசன் ஓர் அரசியல் தலைவராக இல்லாமல், ஓர் இந்திய குடிமகனாக ராகுல் காந்தியின் யாத்திரையில் கலந்துகொண்டதாக தெரிவித்தார்.

பட மூலாதாரம், mnm party

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: