You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: 20 பவுன் தங்க நகைகளை ஒப்படைத்த தூய்மை பணியாளர்
காணொளி: 20 பவுன் தங்க நகைகளை ஒப்படைத்த தூய்மை பணியாளர்
திருவாரூரில் ஆட்டோவில் இருந்து தவறி விழுந்த 20 பவுன் தங்க நகை மற்றும் 750 கிராம் வெள்ளி பொருட்களை துரை என்பவர் மீட்டு நகர காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார். அவர் திருவாரூர் நகராட்சியில் தூய்மை பணியாளராக பணிபுரிபுரிகிறார்
தவறவிடப்பட்ட நகைகள் சென்னை கூடுவாஞ்சேரியை சேர்ந்த முத்துலட்சுமி என்பவருக்கு சொந்தமானவை என்று தெரியவரவே, அவரிடம் நகைகளை காவல்துறையினர் ஒப்படைத்தனர்.
நகைகளை பாதுகாப்பாக ஒப்படைத்த தூய்மை பணியாளருக்கு காவல் ஆய்வாளர் சந்தானமேரி மாலை அணிவித்து கௌரவப்படுத்தினர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு