இத்தாலி குளிர்கால ஒலிம்பிக் போட்டியின் தருணங்கள் - புகைப்படத் தொகுப்பு

வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

இத்தாலியின் மிலன், கார்டினா நகரங்களில், 25வது குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறுகின்றன. பிப்ரவரி 6-ஆம் தேதி தொடங்கிய இப்போட்டிகள், 22ஆம் தேதி நிறைவு பெறுகின்றன.

இந்த 25வது குளிர்கால ஒலிம்பிக்கில் 90 நாடுகளைச் சேர்ந்த சுமார் 3,000 விளையாட்டு வீரர்கள், 116 பதக்கங்களுக்காக போட்டியிடுகிறார்கள்.

இதில் இந்திய அணியும் கலந்துகொள்கிறது. இந்தியா சார்பில் ஆரிஃப் முகமது கான், ஸ்டான்சின் லுண்டப் ஆகிய இருவர் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கின்றனர்.

குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் 1924-ஆம் ஆண்டு பிரான்சில் தொடங்கியதிலிருந்து, இதில் அதிக வெற்றிகளைப் பெற்ற நாடு நார்வே ஆகும்.

குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் வரலாற்றில் அதிக பதக்கங்களை வென்ற நாடு என்ற சாதனையை வைத்துள்ள நார்வே மொத்தம் 405 பதக்கங்களுடன் பதிவு செய்துள்ளது. இதில் அதிக தங்கப் பதக்கங்களும் (148) அடங்கும்.

இந்த முறையும், 8 தங்கப் பதக்கங்கள் உள்பட 18 பதக்கங்களுடன் நார்வே முன்னிலையில் உள்ளது.

யுக்ரேன் மீதான ரஷ்யாவின் முழு அளவிலான படையெடுப்பிற்குப் பிறகு சக விளையாட்டு வீரர்கள் கொல்லப்பட்டதை சித்தரிக்கும் தலைக்கவசம் அணிந்திருந்ததால், யுக்ரேனைச் சேர்ந்த விளாடிஸ்லாவ் ஹெராஸ்கெவிச் குளிர்கால ஒலிம்பிக்கில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு