ஜெயலலிதாவின் உடலுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தும் பொதுமக்கள் (புகைப்படத் தொகுப்பு)

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் இறந்த உடல் இன்று அதிகாலை ராஜாஜி அரங்கில் வைக்கப்பட்டது. தொடர்ந்து, பொதுமக்கள், கட்சித்தொண்டர்கள் மற்றும் பிரபலங்கள் என அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, டிசம்பர் 5-ஆம் தேதியன்று (திங்கள் கிழமை) காலமான தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல் பொது மக்கள் இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக ராஜாஜி அரங்கத்தில் வைக்கப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, தமிழகத்தின் பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு அஞ்சலி செலுத்தினார்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்கு துக்கம் அனுஷ்டிக்கும் விதமாக செவ்வாய் கிழமை (06.12.16) முதல் வியாழக்கிழமை (08.12.16) வரை தமிழகத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ராஜாஜி அரங்கில் பொதுமக்கள் பார்வைக்காக ஜெயலலிதாவின் உடல் வைக்கப்பட்டிருக்கிறது. உடலின் அருகே சசிகலா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மறைந்த தமிழக முதல்வரின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்த ஆயிரக்கணக்கில் திரண்டிருக்கும் மக்கள் கூட்டம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, தமிழக முதலைமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு கேரள மாநிலத்தில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு ஒரு நாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஜெயலலிதா உடல் வைக்கப்பட்டுள்ள ராஜாஜி அரங்கத்தில், அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்த ஆயிரக்கணக்கான மக்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகள் கூடியுள்ளனர்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ''எனக்கென்று எதுவுமில்லை, எனக்கென்று யாருமில்லை தமிழக மக்கள் தான் எனக்கு எல்லாமே '' அதிமுக தொண்டர்களை உணர்ச்சி வெள்ளத்தில் தத்தளிக்க செய்யும் ஜெயலலிதாவின் வாசகம்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, டிசம்பர் 6-ஆம் தேதியன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 4.30 மணியளவில் சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள எம்ஜிஆர் நினைவகத்தில் மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் இறுதி சடங்கு முழு அரசு மரியாதையுடன் நடக்கவுள்ளது

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, தமிழக முதலைமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்கு தமிழகத்தில் ஒரு வாரம் அரசு முறைத் துக்கம் அனுசரிக்கப்படுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.