ரான்சம்வேர் இணைய தாக்குதல் : காரணமானவர்களை கண்டுபிடிக்க திணறும் யூரோபோல்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கோப்புப்படம்

பிரிட்டனின் தேசிய சுகாதார சேவை உள்பட உலகில் உள்ள பிற நிறுவனங்கள் மீது இணைய தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பெரிய அளவில் நடந்துள்ளதாக யூரோபோல் அமைப்பு தெரிவித்துள்ளது.

இதற்கு காரணமான குற்றவாளிகளை பிடிக்க கடுமையான சர்வதேச விசாரணை ஒன்று வேண்டும் என்று யூரோபோல் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமையன்று, 99 நாடுகளை சேர்ந்த சுமார் 75,000 கணினிகளில் ரான்சம்வேர் ஊடுருவி தரவுகளை அணுகமுடியாதபடி செய்துவிட்டது.

பட மூலாதாரம், Getty Images

ரஷ்யா உள்பட பல ஐரோப்பிய நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.

எனினும், WannaCry மற்றும் பிற பெயர்களை கொண்டுள்ள இந்த தீய மென்பொருளின் பரவல் ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது போன்று தோன்றினாலும் அதன் அச்சுறுத்தல் இன்னும் முடியவில்லை.

பட மூலாதாரம், Getty Images

இணைய வழி தாக்குதல்களை விசாரிக்கும் இ சி 3 எனப்படும் தனது குழு பாதிக்கப்பட்ட நாடுகளுடன் நெருக்கமாக வேலை செய்து வருவதாகவும், அச்சுறுத்தலை குறைத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவவும் முயன்று வருவதாகவும் யூரோபோல் தெரிவித்துள்ளது.

பிரிட்டனில் மட்டும் மொத்தமாக 48 தேசிய சுகாதார சேவைகள் நேற்று நடைபெற்ற இணைய தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளது என்றும், அதில் 6 -ஐ தவிர மற்றவை இயல்பு நிலைக்கு திரும்பியிருக்கிறது என்றும் உள்துறை அமைச்சர் ஆம்பெர் ரட் தெரிவித்துள்ளார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்