கொரோனா வைரஸ்: நடிகர் கமல் இல்லத்தில் 'தனிமைப்படுத்தப்பட்ட வீடு' நோட்டீஸ் ஒட்டப்பட்டது ஏன்?

பட மூலாதாரம், Getty Images

வாசிக்கும் நேரம்: 1 நிமிடங்கள்

சென்னை ஆழ்வார்பேட்டையில் இருக்கும் நடிகர் கமல்ஹாசனின் இல்லத்தில் கொரோனா தாக்கத்தால் 'தனிமைப்படுத்தப்பட்ட வீடு' என்ற நோட்டீஸ் ஒட்டப்பட்ட சிலமணிநேரத்தில் அகற்றப்பட்டது.

பட மூலாதாரம், Facebook

நடிகர் கமலின் மகள் சுருதிஹாசன் ஒரு வாரத்திற்கு முன்னர் லண்டனிலிருந்து இந்தியா திரும்பினார். தன்னை தனிமைப்படுத்திக் கொள்வதாக சமூகவலைத்தளங்களில் அவர் குறிப்பிட்டிருந்தார். அதனால் ஒட்டப்பட்டிருக்கலாம் எனக் கருதப்பட்ட நிலையில், அவர் வேறு இடத்தில் வசிப்பதாகத் தகவல் வெளியானது.

X பதிவை கடந்து செல்ல
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு

தற்போது அந்த நோட்டீஸை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றினர்.

பிபிசி தமிழிடம் பேசிய மாநகராட்சி அதிகாரி, அந்த நோட்டீஸ் தவறுதலாக ஒட்டப்பட்டிருக்கும் என தெரிவித்தார்.

Instagram பதிவை கடந்து செல்ல
Instagram பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Instagram வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Instagram குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

Instagram பதிவின் முடிவு

சென்னையில் சுமார் 24,000 வீடுகளில் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளதால், வெளிநாட்டிலிருந்து திரும்பியவர்கள் என்ற தகவலால் ஒட்டப்பட்டிருக்கலாம் என அந்த அதிகாரி தெரிவித்தார்.

இதனையடுத்து, மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் ஆழ்வார்பேட்டை வீட்டில் கடந்த சில ஆண்டுகளாக தான் வசிப்பதில்லை என்றும் கட்சியின் அலுவலகமாக அந்த இடம் செயல்படுகிறது எனவும் தெரிவித்துள்ளார்.

''நான் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாக வெளியான செய்தி உண்மையில்லை. வருமுன் தடுக்கும் நடவடிக்கையாக நான் கடந்த இரண்டு வாரங்களாகத் தனிமைப்படுத்தலை மேற்கொண்டுள்ளேன்,''எ அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: