You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: T20 WC- தென்னாப்பிரிக்க அணி செய்த ஒரு தவறு என்ன?
டி20 உலகக் கோப்பை அரையிறுதியில் தென்னாப்பிரிக்க அணியை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி நியூசிலாந்து அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. கொல்கத்தாவில் நடந்த இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 169 ரன்கள் எடுத்தது. அந்த ஸ்கோரை 12.5 ஓவர்களிலேயே நியூசிலாந்து அணி சேஸ் செய்தது. அதிரடியாக விளையாடிய நியூசிலாந்து பேட்டர் ஃபின் ஆலன் 33 பந்துகளில் சதம் அடித்து சாதனை படைத்தார். டி20 உலகக் கோப்பை வரலாற்றின் அதிவேக சதம் இது. இந்த போட்டியில் தென்னாப்பிரிக்க அணி செய்த தவறு என்ன என்பதை சென்னை சூப்பர் கிங்ஸ் முன்னாள் வீரர் யோ மஹேஷ் விளக்குகிறார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு