ஃபெஞ்சல் புயல்: தமிழ்நாடு, புதுச்சேரியை புரட்டிபோட்ட மழை - புகைப்படத் தொகுப்பு

பட மூலாதாரம், Defence PRO

படக்குறிப்பு, புதுவையில் கிருஷ்ணா நகர், ரெயின்போ நகர் போன்ற பகுதியில் உள்ள தெருக்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. கடல், மழை நீரை உள் வாங்காததால் தண்ணீர் தேங்கியுள்ளதாக புதுச்சேரி முதல்வர் தெரிவித்துள்ளார்
வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்
படக்குறிப்பு, இன்று காலை 7 மணி நிலவரப்படி, கடந்த 24 மணி நேரத்தில் புதுச்சேரியில் 46 செ.மீ மழை பதிவாகியுள்ளது
படக்குறிப்பு, புதுச்சேரியின் கிருஷ்ணா நகரில் வெள்ள நீர் சூழ்ந்துள்ள பகுதியில் இருந்து மக்களை பாதுகாப்பான இடத்திற்கு ராணுவத்தினர் அழைத்து சென்றனர்

பட மூலாதாரம், Defence PRO

படக்குறிப்பு, புதுச்சேரியில் சாலையில் ஓடிய வெள்ளத்தில் முழ்கிய ஒரு இருசக்கர வாகனம்

பட மூலாதாரம், Defence PRO

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, புதுச்சேரியில் அரசு பேருந்து நிறுத்துமிடத்தில் சூழ்ந்துள்ள தண்ணீர்.

பட மூலாதாரம், X/@NDRFHQ

படக்குறிப்பு, புதுச்சேரியில் வெள்ளம் சூழ்ந்துள்ள வீட்டில் இருந்து மூதாட்டி ஒருவரை பாதுகாப்பாக அழைத்து வரும் மீட்பு படையினர் ஒருவர்.

பட மூலாதாரம், Defence PRO

படக்குறிப்பு, வட தமிழகத்தின் கடலோர பகுதிகளின் சில இடங்களில் கனமழை பெய்து வருகிறது. டிசம்பர் 3-ஆம் தேதி வரை மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

பட மூலாதாரம், X/ADG PI - INDIAN ARMY

படக்குறிப்பு, மாவட்ட நிர்வாகம் புயலை தாக்கத்தை எதிர்கொள்ள தேவையை நடவடிக்கையை எடுத்துள்ளது என புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் தெரிவித்துள்ளார்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சென்னையில் உள்ள மெரினா கடற்கரையில் நிறுத்திவைக்கப்பட்டிருக்கும் மீனவ படகுகள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, புயல் கரையை கடக்கும்போது 70-80 கி.மீ வேகத்தில் காற்று வீசியது. அவ்வபோது 90 கி.மீ வேகத்திலும் காற்று வீசியது
படக்குறிப்பு, திருவண்ணாமலையில் சாலையில் ஓடிய வெள்ளம் காரணமாக, ஒரு பக்க சாலை மூடப்பட்டுள்ளது

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)