You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: தமிழகம் போலவே பஞ்சாபிலும் நடக்கும் மாட்டு வண்டி பந்தயம்
தமிழ்நாட்டில் நடக்கும் ரேக்ளா பந்தயத்தை ஒத்த ஒரு பாரம்பரிய விளையாட்டு பஞ்சாபில் நடைபெறுகிறது.
பிரகாசிக்கும் கொம்புகளுடன், தலை மூடப்பட்டு, மசாஜ் செய்யப்படுகிறது. ராக்கெட், வேலி, ரத்தன், புக்லா என்று அழைக்கப்படும் இந்தக் காளைகள், கிராமப்புற ஒலிம்பிக் என்றழைக்கப்படும் கிலா ராய்ப்பூர் விளையாட்டில் முதல் முறையாகப் பங்கேற்றன.
இந்த விளையாட்டு, 90 ஆண்டுகளுக்கும் மேலாக நடத்தப்படுகிறது. ஆனால், 2014இல் உச்ச நீதிமன்றம், இந்த விளையாட்டுகளை, விலங்குகள் வதைத் தடுப்புச் சட்டத்தை மீறுவதாகக் கூறி தடை செய்தது.
ஆனால், பஞ்சாப் அரசால், விலங்குகள் வதைத் தடுப்புச் சட்டம் பஞ்சாப் திருத்தம் 2024 என்ற மசோதா நிறைவேற்றப்பட்ட பிறகு, இந்தப் பந்தயங்கள் மீண்டும் நடத்தப்படுகின்றன. இவை பிப்ரவரி 17 முதல் 19 வரை நடைபெற்றன.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு