இந்தியா எப்படி மின்மயமாக்கப்பட்டுள்ளது?

இந்தியாவின் அனைத்து கிராமங்களும் மின்மயமாக்கப்பட்டுள்ளதாக நரேந்திர மோதி அரசு அறிவித்துள்ளது. இது உண்மையா?

இது முழுமையான தாஜ் மஹாலா?
அரசு கூறுவது இப்படித்தான் இருக்கிறது.
ஒரு கிராமத்தின் 10% வீடுகளும், அரசு கட்டடங்களும் மின் வசதி பெற்றிருந்தால், மின்மயமாக்கப்பட்டதாக அரசு கூறுகிறது.

இங்கு ஒரு வீடு இந்தியாவில் 10 மில்லியன் குடும்பங்களை பிரதிநிதித்துவப்படுத்தினால்!

அரசாங்க மதிப்பீடுகளின்படி 82% குடும்பங்களுக்கு ஏற்கனவே மின்வசதி உள்ளது.
ஆனாலும், 31 மில்லியன் குடும்பங்களுக்கு இன்னும் மின்வசதி தேவை

14,84,11,158 வீடுகள் ஏற்கனவே மின்வசதி பெற்றுள்ளதாக அரசு கூறுகிறது.

ஒரு பல்ப் இந்தியாவின் ஒரு மாநிலத்தை பிரதிநிதித்துவப்படுத்தினால்!

29 மாநிலங்களில் வெறும் 6 மாநிலங்கள் மட்டுமே 24 மணி நேர மின்வசதி பெற்றிருக்கிறது.

தமிழ்நாடு, குஜராத், ஹிமாச்சல், பஞ்சாப், தெலங்கானா, மேற்கு வங்கம் மட்டுமே 24 மணி நேர மின் வசதி பெற்றுள்ளது.

ஒரு கிராமத்தின் 10% வீடுகளும், அரசு கட்டடங்களும் மின் வசதி பெற்றிருந்தால், அந்த கிராமம் மின்மயமாக்கப்பட்டதாக அரசு கூறுகிறது. டிசம்பர் 2018க்குள் இந்தியாவில் அனைத்து வீடுகளுகளுக்கும் மின்வசதி கொடுக்க, 2.5 பில்லியன் டாலர் மதிப்பிலான திட்டத்தை 2015-ம் ஆண்டு மோதி தொடங்கினார்.

இத்திட்டத்தை தவிர, 597,464 கிராமங்களுக்கும், 5 மில்லியனுக்கும் அதிகமான குடும்பங்களும் மின் இணைப்பு பெற்றுள்ளன.

இந்தியா சுதந்திரத்திற்கு பின் பல சாதனைகளை செய்துள்ளது.

1947-ம் ஆண்டு

வெறும் 1500 கிராமங்களில் மட்டுமே மின் வசதி இருந்தது.

2005-2014 வரை

1,082,280க்கும் அதிகமான கிராமங்களுக்கு இணைப்பு கொடுக்கப்பட்டது.

மே 2018-ல்

கூடுதலாக 18,452 கிராமங்களுக்கு மின் வசதி கொடுக்கப்பட்டு, இந்தியாவின் அனைத்து கிராமங்களுக்கும் மின் வசதி கிடைத்துள்ளது.

இந்தியாவின் பெரும்பாலான கிராமங்களில் மின் வசதி இருந்தாலும், தூரத்தில் உள்ள வீடுகளை இணைப்பது கடினமானதாக உள்ளது.

மாதாந்திர மின் கட்டணம் செலுத்த முடியாததாலும், அடிக்கடி மின் வெட்டு ஏற்படுவதாலும், சில குடும்பங்கள் மின் இணைப்பை பெற விரும்பாமலும் இருக்கலாம்.