|
முன்னேறும் தலித் பெண்கள் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
புதிய முயற்சி இந்தியாவின் பல பகுதிகளில் இன்னமும் ஆனால், அவர்களின் நிலையில் மாற்றமேற்பட அவ்வப்போது சிற்சில முயற்சிகள் எடுக்கப்படுகின்றன. அந்த வகையில் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேலாண்மை நிறுவனம் (தாட்கோ) தமிழகமெங்கிருந்தும் நூறு தலித் மாணவியரை தேர்வு செய்து அவர்களுக்கு விமானப்பணிப் பெண்களுக்கான பயிற்சியை கொடுக்கிறது. சென்னையில் தற்போது இன்டியன் ஏர்ஹோஸ்டஸ் அகெடமி எனும் நிறுவனம் அப்பயிற்சியினை அளித்துவருகிறது. அந்நிறுவனத்தின் சென்னைப்பிரிவு மேலாளர் கண்ணன் தங்களிடம் பயிலும் மாணவியர் மிக ஆர்வமாக கற்றுக்கொள்வதாகவும், விமானப்பணிப்பெண் என்று மட்டுமல்லாமல், விமானப் போக்குவரத்தின் பல்வேறுநிலைகளிலும், சுற்றுலாத்துறையில் வரவேற்பாளர் போன்ற பணிகளிலும், பயிற்சி பெறுவோருககு வாய்ப்புக்கள் காத்திருப்பதாகவும் குறிப்பிட்டார். பயிற்சியாளர் ஸ்ரீகுமார், கிராமங்களிலுள்ள தாழ்த்தப்பட்ட வகுப்பிலிருந்து இவர்கள் வந்தவர்களாக இருந்தாலும் ஆங்கிலத்தைக்கூட செவ்வனே கற்றுக் கொள்ளும் ஆர்வம் அவர்களிடம் இருப்பதாகக குறிப்பிட்டார். பயிற்சி பெறும் மாணவியர் தாழ்வுமனப்பான்மை ஏதுமின்றி நம்பிக்கையுடன் வருங்காலத்தை எதிர்நோக்குவதாகக் கூறினார். | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||